ETV Bharat / state

அரசுப்பேருந்து மோதி விபத்து: கட்டுமானத்தொழிலாளி உயிரிழப்பு!

author img

By

Published : Jun 27, 2022, 9:45 PM IST

கன்னியாகுமரி, இரணியல் அருகே அரசுப்பேருந்தை முந்தி சென்ற கட்டுமானத்தொழிலாளி மற்றொரு அரசுப்பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கட்டுமான தொழிலாளி  உயிரிழப்பு
கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள உதியார்விளை பகுதியைச் சேர்ந்தவர் கட்டுமானத் தொழிலாளி சஜென் வயது(27). இவர் இன்று 13 வயது உறவின சிறுமி வாணி ஸ்ரீ என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திங்கள்நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பூசாஸ்தான்விளை அருகே வந்தபோது தனக்கு முன் நாகர்கோவில் நோக்கி சென்ற அரசுப்பேருந்தை முந்தி சென்றுள்ளார். அதேநேரம் திங்கள் நகரிலிருந்து குளச்சலுக்கு வந்து கொண்டிருந்த மற்றொரு அரசுப்பேருந்து மீது சஜென் வந்த இருசக்கர வாகனம் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

அப்போது சஜென் முந்தி சென்ற அரசுப்பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமி வாணிஸ்ரீ பலத்த காயங்களுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து அரசுப்பேருந்து ஓட்டுநர் குமரேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரணியல் காவல் துறையினர், விபத்து நடந்த இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு

இதையும் படிங்க: கணவனை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவி: லாரி மோதி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள உதியார்விளை பகுதியைச் சேர்ந்தவர் கட்டுமானத் தொழிலாளி சஜென் வயது(27). இவர் இன்று 13 வயது உறவின சிறுமி வாணி ஸ்ரீ என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திங்கள்நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பூசாஸ்தான்விளை அருகே வந்தபோது தனக்கு முன் நாகர்கோவில் நோக்கி சென்ற அரசுப்பேருந்தை முந்தி சென்றுள்ளார். அதேநேரம் திங்கள் நகரிலிருந்து குளச்சலுக்கு வந்து கொண்டிருந்த மற்றொரு அரசுப்பேருந்து மீது சஜென் வந்த இருசக்கர வாகனம் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

அப்போது சஜென் முந்தி சென்ற அரசுப்பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமி வாணிஸ்ரீ பலத்த காயங்களுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து அரசுப்பேருந்து ஓட்டுநர் குமரேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரணியல் காவல் துறையினர், விபத்து நடந்த இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு

இதையும் படிங்க: கணவனை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவி: லாரி மோதி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.